தண்ணீர் தொட்டியில் மூழ்கி மீன் வியாபாரி பலி

வள்ளியூர் அருகே மீன் வியாபாரி ஒருவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


வள்ளியூர் அருகே மீன் வியாபாரி ஒருவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வள்ளியூர் அருகேயுள்ள நம்பியான்விளையைச் சேர்ந்த பால்பாண்டி மகன் செந்தில்வேல் முருகன் (45).  மீன்வியாபாரி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு அருகிலுள்ள தோட்டத்துக்குச் சென்று தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.  இதுகுறித்து, வள்ளியூர் காவல் உதவி ஆய்வாளர் தாஸ் வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com