ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-20ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு வழிகாட்டுதல்படி அரசு நிதி உதவி பெறும் பாடப் பிரிவுகளான இளம் வணிகவியலுக்கு (பி.காம்) மே 16 ஆம் தேதி காலை 9 மணிக்கும், இளம் அறிவியல் (பி.எஸ்.சி) அனைத்து பாடப் பிரிவுகளுக்கு மே 17 ஆம் தேதி காலை 9 மணிக்கும் மாற்றப் பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாய்வுக்கு வரும்போது, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் பிளஸ் 1 தேர்ச்சி சான்றிதழையும் கொண்டு வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.