குற்றாலநாதர் கோயிலில் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில், சென்னையைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில், சென்னையைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, சென்னை பாதுகாப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அன்னதான கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் (பொ), தென்காசி காசிவிஸ்வநாதர், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையினர், மின்வாரிய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோயில்கள், அவற்றின் மொத்த சுற்றளவு, கட்டடங்கள், கோயில் வரைபடம், கோயில் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள், அடையாள அட்டை, கோயில் விழாக்கள், விழாக்களின் போது மக்கள் கூட்டம், பூஜை நேரம், அன்னதானம், பிரசாதம், குடிநீர், மின்சாரம், தகவல் தொடர்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா, ஆபரணங்கள், உண்டியல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவு காவல் துறையினர் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com