சங்கரன்கோவிலில் மதிமுக 26ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தேரடித் திடலில் பொதுமக்களுக்கு இனிப்பும், ஏழை மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன், நகரச் செயலர் ச.ஆறுமுகச்சாமி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், சங்கரநாராயணன், மாவட்ட துணைச் செயலர் மோகன்தாஸ், முன்னாள் துணைச் செயலர் ஆர்.எஸ்.மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், நகர துணைச் செயலர் ராசமாணிக்கம், நகரப் பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிரணியின் ஜெயலட்சுமி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வாணிமுருகன், நயினார்முகமது, பொன்னுச்சாமி, அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.