மழை வேண்டி நெல்லையில் வருண ஜெபம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலைக்குமார சுவாமி கோயிலில் மழை வேண்டி வியாழக்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலைக்குமார சுவாமி கோயிலில் மழை வேண்டி வியாழக்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.
தற்போது நெல்லையில் வெயிலின் தாக்கம் 102 முதல் 105 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வறண்டுவிட்டன. மழை மட்டுமே இதற்கான தீர்வாக உள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலைக்குமார சுவாமி கோயிலில் மழை வேண்டி வியாழக்கிழமை சிறப்பு வருண ஜெபம் நடைபெற்றது. யாகசாலை பூஜை, வருண ஜெப மந்திர பாராயணம், வருண காயத்ரி மந்திர ஹோமம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகர், மூலவர், சுப்பிரமணியர், சண்முகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com