முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோயில் கொடை விழா
By DIN | Published On : 15th May 2019 09:13 AM | Last Updated : 15th May 2019 09:13 AM | அ+அ அ- |

ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேனைத்தலைவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கொடை விழாவையொட்டி கடந்த மே 7ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கடந்த திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு கும்பம் ஏற்றி, குடி அழைப்பு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தலை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு பட்டாணி பாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உச்சிகால பூஜை, மாலையில் மகா அபிஷேகம், அலங்காரம், இரவில் சாமக்கொடை, ஊட்டுகளம், அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. கொடைவிழாவை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்ன நம்பி பூஜை நடைபெறுகிறது.