சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில், வைகாசி வசந்த உத்ஸவ திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி, உத்ஸவ மூர்த்தியான முத்துக்குமார சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நாள்தோறும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஊர் சுபிட்ஷமாக இருக்கவேண்டி, 6ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை உத்ஸவ மூர்த்தியான ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கு காய்கனிகளால் சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, சிவகிரி ஜமீன்தார் ராஜா வி.எஸ்.வி. சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் செய்திருந்தார்.