திசையன்விளை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

திசையன்விளை  அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

திசையன்விளை  அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.
  திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி மகன் இசக்கிகாளி (25). பந்தல் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர்கள்  உச்சிமகாளி மகன்கள் ராஜா (45), கோபால் (42). இசக்கிகாளியின் வளர்ப்பு நாய் புதன்கிழமை கோபால் மகன் தளவாயை  கடித்து விட்டதாம். இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜா, கோபால் ஆகியோர் சேர்ந்து இசக்கிகாளியை அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த அவர்  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com