பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு

கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில் 1184-ஆவது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில் 1184-ஆவது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
  பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கம்பன் இலக்கிய சங்கத் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். பாஷ்யம் இறைவாழ்த்துப் பாடினார். 
வரலாற்று ஆய்வாளர் செ.திவான்  கிராம காதையில் கிஸ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலுக்கு விளக்கமளித்தார். மருத்துவர் மகாலிங்கம் அய்யப்பன், விசித்திர கவிகள் மற்றும் அதன் விளக்கத்தைக் கூறினார். பொருளாளர் மு.அ.நசீர் வேதங்கள் கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றி பேசினார். 
கூட்டத்தில், ஆசிரியர் கோதை மாறன், கவிஞர் முருகேசன், குமரகுருபரன், சிவதானு, நெல்லையப்பன், நாகராஜன், ராமன், பிரபா கிருட்டினன் ஆகியோர் கலந்துகொண்டனர். பி.சுந்தரம் வரவேற்றார்.  இணைச் செயலர் இரா. முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com