திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் கூட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலரும், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய உறுப்பினருமான வானுமாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு, மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டலத் தலைவர்கள் மாரியப்பன், ஐயப்பன், பாலாஜி, வட்டாரத் தலைவர்கள் சொர்ணம், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், வரும் 21-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மற்றும் அமைதிப் பேரணி நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.