முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் 105 டிகிரி வெயில்
By DIN | Published On : 18th May 2019 09:27 AM | Last Updated : 18th May 2019 09:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் உக்கிரம் மிகத் தீவிரமாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை 104 டிகிரி பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முற்பகல் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பிற்பகலில் வீசும் அனல்காற்றால் வாகன ஓட்டிகளும், பேருந்து, ரயில் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிப்பதால், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருமே தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.