புளியங்குடியில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெருவில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகே 5 அரிசி மூட்டைகள் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று கிடந்ததாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஒரு மினி ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த அரிசி மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.