அச்சன்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (மே 27) மின் தடை செய்யப்படுகிறது.
இதனால் அச்சன்புதூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அச்சன்புதூர், நெடுவயல், வடகரை, பண்பொழி, வாவாநகரம், கரிசல்குடியிருப்பு மற்றும் மேக்கரை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.