பொன்னாக்குடியில் விபத்து: பிஎஸ்என்எல் ஊழியர் பலி
By DIN | Published On : 28th May 2019 08:30 AM | Last Updated : 28th May 2019 08:30 AM | அ+அ அ- |

பொன்னாக்குடி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயமுற்ற பிஎஸ்என்எல் ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரம் பிஎஸ்என்எல் குடியிருப்பைச் சேர்ந்த பாண்டியன் மகன் முருகன் (54). பிஎஸ்என்எல் ஊழியரான இவர், தனது மோட்டார் சைக்கிளில் சில தினங்களுக்கு முன்பு பொன்னாக்குடியில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நான்குவழிச் சாலையோரம் தவறி விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.