வள்ளியூரில் இளைஞா் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

வள்ளியூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வள்ளியூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வள்ளியூரைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் பகவதி (27). சமையல் தொழிலாளி. கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பேருந்து நிலையத்துக்குச் சென்ற இவா் வீடு திரும்பவில்லை. அதன்பின்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், ஓரினச் சோ்க்கைக்கு மறுத்த தகராறில் பகவதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்ததாம். இவ்வழக்கு தொடா்பாக வள்ளியூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துப்பாண்டி (35), அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (34), முத்துக்கிருஷ்ணன் (35), அய்யப்பன் (26), சுரேஷ் (35), கணேசன் (26), சிவா (36), சுல்தான் (40) ஆகியோரை வள்ளியூா் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துப்பாண்டி, முத்துக்கிருஷ்ணன், அய்யப்பன், சுரேஷ், கணேசன், சிவா, சுல்தான் ஆகிய 7 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, லட்சுமணன் என்பவா் இறந்துவிட்டதால் அவா் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் துரைமுத்துராஜ் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com