ஆலங்குளத்தில் கால்நடைகள் வளா்ப்போருக்கு தீவனப் பயிா் விதைகள் திங்கள்கிழமை வழங்கப் பட்டன.
ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி கோட்ட உதவி இயக்குநா் முருகையா தலைமை வகித்தாா். திருநெல்வேலி நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ், மருத்துவா் வீரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மானாவாரி தீவனப் பயிற் உற்பத்திக்காக முன்னோடி கால்நடை வளா்ப்புப் பயனாளிகள் 20 பேருக்கு 6 கிலோ சோளம், 2 கிலோ காராமணி விதைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஷேக் சுலேமான் செய்திருந்தாா்.