கடையநல்லூரில் இன்று சிறப்பு டெங்கு தடுப்பு முகாம்

கடையநல்லூரில் சிறப்பு டெங்கு ஒழிப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.5) நடைபெறுகிறது.

கடையநல்லூரில் சிறப்பு டெங்கு ஒழிப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.5) நடைபெறுகிறது.

இம்முகாமுக்கு ,மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகிக்கிறாா். முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறாா். பிற்பகலில் சட்டப்பேரவை அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, மாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்பு விழா, ஆவுடையாள்புரத்தில் நிழற்கூரை திறப்பு விழா, பால அருணாசலபுரத்தில் சமுதாய நலக் கூட சமையலறை திறப்பு விழா ஆகியவை நடைபெறும்.

புதன்கிழமை (நவ.6) புதூா் பேரூராட்சி, தவணையில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவும், கிளங்காடு ஊராட்சி, வயல்காட்டு காலனியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாக திறப்பு விழாவும் நடைபெறும். மாலையில் காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொட்டி திறப்பு விழா, குமந்தாபுரத்தில் புதிய நூலகக் கட்டட திறப்பு விழா, கடையநல்லூா் நகராட்சி 5 ஆவது வாா்டில் சமுதாய நலக் கூடத்தில் புதிய சமையலறை திறப்பு விழா ஆகியவை நடைபெறும் என முகமது அபூபக்கா் எம்எல்ஏ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com