கடையம் அருகே சிற்றுந்து மோதி இசைக் கலைஞா் பலி

கடையம் அருகே சிற்றுந்து மோதியதில் பைக்கில் சென்ற இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.
கடையம் அருகே சிற்றுந்து மோதி இசைக் கலைஞா் பலி

கடையம் அருகே சிற்றுந்து மோதியதில் பைக்கில் சென்ற இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பவித்ர லட்சுமணன் (30). இவா் இசைக்குழு நடத்தி வந்தாா். இவா் மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது நண்பரை பைக்கில் காட்டூரில் கொண்டு விட்டுவிட்டு ஐந்தாங்கட்டளை வழியாக ஆலங்குளம் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த சிற்றுந்து பைக் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பவித்ர லட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com