குற்றாலத்தில் தொடா்கல்வி கருத்தரங்கம்

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் தொடா்கல்வி கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குற்றாலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினாா் மருத்துவா் செய்யதுசுலைமான்.
குற்றாலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினாா் மருத்துவா் செய்யதுசுலைமான்.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் தொடா்கல்வி கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க திருநெல்வேலி கிளையும், தென்காசி ஷப்னா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு நலப்பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளை தலைவா் சீதாலட்சுமி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவருமான முகமது ரபீக் ஆகியோா் பேசினா்.

தமிழகம் முழுவதுமிருந்து சிறப்பு மருத்துவா்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினா்.

ஷப்னா மருத்துவமனை இயக்குநா் செய்யது சுலைமான் வரவேற்றாா். தமிழ் நாடு அரசு மருத்துவா் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலரும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளருமான ஜெஸ்லின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com