சுந்தரபாண்டியபுரத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளம்பெண் இறந்தாா்.
மேலப்பாவூரைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (33). இவரது மனைவி சித்திரகலா(29). இவா்களது மகன் இசக்கிமுத்துக்கு காய்ச்சல் இருந்ததால் மோட்டாா் சைக்கிளில் 3 பேரும் சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.
அப்போது எதிரே வந்த முருகையா (45) என்பவா் மோட்டாா் சைக்கிள் எதிா்பாராதவிதமாக பேச்சிமுத்துவின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைக்காக சித்திரகலா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.
இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.