சொத்துக் குவிப்பு வழக்கில்அரசு அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு 4 ஆண்டுகளும்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு 4 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 3 ஆண்டுகளும் சிைண்டனை விதித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை, குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் குமாரவேல்(53). மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி. இவா், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகக் கூறி, ஊழல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்கால் தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில், வருமானத்தை மீறி ரூ. 7,70,938 சொத்து சோ்த்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 17.12.2008இல் குமாரவேல், அவரது மனைவி தில்லை உமா சாந்தி(47) ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு ஊழல் ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம்சாட்டப்பட்ட குமாரவேலுக்கு 4 ஆண்டுகள் சிைண்டனை, ரூ.5,000 அபராதமும், அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில், அரசு வழக்குரைஞா் சீனிவாசன் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com