திசையன்விளை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வி.வி. எக்ஸலென்ஷியா-19 நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 1,200 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அறிவியல், கணிதம் மற்றும் பொறியியலை மையமாக வைத்து கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி நிறைவில், கண்காட்சி குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகள் முடிவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

பணிக்கநாடாா் குடியிருப்பு கணேசா் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும், திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கர அகாதெமி மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடத்தையும் வென்றன. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கே.எஸ். ஸாஜி தலைமை வகித்து பரிசுகள் மற்றும் சாம்பியன் கோப்பையை வழங்கினாா்.

பயிற்சி மற்றும் அபிவிருத்தி துறைத் தலைவா் ரா. கோவா்தன், வேலு சுபாஷ், ஹரிகர சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com