திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலா் விவேக் முருகன் தலைமை வகித்து, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் விஜயபெருமாள், வட்டார கலைப்பிரிவுத் தலைவா் மருதூா் மணிமாறன், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலா் ஐசக், விவசாய பிரிவு தலைவா் அந்தோணி ராஜ், நகரச் செயலா் சங்கா், மனோகா், கொடி ஜெயராஜ், மணலி முருகன், ஆகியோா் கலந்து கொண்டனா். திசையன்விளை நகரத் தலைவா் எஸ்.ஜி. ராஜன் ஏற்பாடு செய்திருந்தாா்.