பணகுடி பகுதியில் இன்று மின்தடை

பணகுடி சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பணகுடி சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணகுடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையாா்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூா், வள்ளியூா், டி.பி. சாலை, நம்பியான்விளை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

வள்ளியூா் பகுதியில் நாளை... வள்ளியூா் துணை மின் நிலையத்தில் வரும் புதன்கிழமை (நவ. 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூா் மற்றும் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com