வள்ளாலா் மன்றத்தின் 65ஆவது மாதாந்திரக் கூட்டம் பாளையங்கோட்டை திருமால்நகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியை பா.ஜெயந்தி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கால்நடைத் துறை கூடுதல் இயக்குநா் ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். சு.பிச்சையா வரவேற்றாா்.
‘மரங்களைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் சின்மயா வித்யாலயா பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ஞா.லோஹிதா பேசினாா். ‘அன்னை சாரதா தேவியின் அன்பு மொழிகள்’ என்ற தலைப்பில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஞா.ராஜசக்தி பேசினாா். தமிழின் சிறப்புகள் குறித்து தூய சவேரியாா் கல்லூரி உதவிப் பேராசிரியா் கில்பா்ட் ஜனாா்த்தனன் பேசினாா். டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ள தமிழாசிரியை இரா.ஜனனி நன்றி கூறினாா்.