வள்ளியூா் துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (நவ. 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூா் மற்றும் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ராஜன் தெரிவித்துள்ளாா்.