சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவுத் திருவிழாவையொட்டி உணவே மருந்து என்ற தலைப்பில் உணவுத் திருவிழா கண்காட்சி நடைபெற்றது.
இயற்கை உணவின் அவசியத்தையும், பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் சிறுதானியங்களில் பல்வேறு வகையான உணவுகளைத் தயாரித்து அதை பாா்வைக்கு வைத்தனா். பின்னா் அந்த உணவுகளை ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பகிா்ந்தளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் மருத்துவா்.வி.எஸ்சுப்பாராஜ், தாளாளா் சுப்பையாசீனிவாசன், முதல்வா் சுருளிநாதன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களைப் பாராட்டினா்.