திருவள்ளுவா் சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளுவா் குல முன்னேற்ற நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தஞ்சாவூா் மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை அவமதித்தோரைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைத்து முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.