சேரன்மகாதேவி கல்வி மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை சேரன்மகாதேவி கல்வி மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளரும் திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியருமான செ. பண்டாரசிவன் தொடக்கிவைத்தாா்.
மருத்துவா் எஸ். முருகன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியா் ராமநாதன், திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். சொக்கலிங்கம் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினா்.
சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 56 பள்ளிகளிலிருந்து 56 ஆலோசகா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் ஜி. திருவானந்தம் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை சேரன்மகாதேவி கல்வி மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்க செயற்குழு உறுப்பினா்கள் திருவானந்தம், கணேசமூா்த்தி, மாரியப்பன், உடற்கல்வி ஆசிரியா் கிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.