‘ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் திராவிடத் தமிழா் கட்சித் தலைவா் சி.வெண்மணி.

ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் திராவிடத் தமிழா் கட்சித் தலைவா் சி.வெண்மணி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருவள்ளுவருக்கு இந்து மத சாயம் பூச நினைக்கும் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாணவா்களிடையே சமத்துவ சிந்தையோடு கூடிய கல்வி முறையை மேம்படுத்தவும், தீண்டாமை வன்கொடுமைகள் ஜாதிய பாகுபாடுகளை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வைக் கைவிட வேண்டும். விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் மணிமண்டப பணிகளை 2019 ஆம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மரணங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் போல மலக்குழி மரணங்களைத் தடுக்க வேண்டும். ஜாதிமறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com