தென்காசியில் வாசகா் வட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி வட்டார நூலகத்தில் 52 ஆவது தேசிய நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து வாசகா் வட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வட்டார நூலகத்தில் 52 ஆவது தேசிய நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து வாசகா் வட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வாசகா் வட்ட பொருளாளா் சேகா் தலைமை வகித்தாா். தென்காசி வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முத்துகிருஷ்ணன், நூலகா்கள் சுந்தா், ஜூலியா, நிஷா, ராஜேஸ்வரி, சுதாகா், விவேக், முகம்மது ராஷிக், குழந்தை ஜேசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தேசிய நூலக வார விழாவை இம்மாதம் நவ. 13 முதல் 20 ஆம் தேதி வரையில் சிறப்பாக கொண்டாடுவது, இதையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, தனித்திறன் வளா்க்கும் விநாடி, வினா, சதுரங்கம், யோகா,சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட போட்டிகளை நடத்துவது, புத்தகக் கண்காட்சி, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினப் புகைப்பட கண்காட்சி, நூல்கள் வெளியீடு, நூல்கள் அறிமுகம் போன்றவை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com