நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழுக் கூட்டம் புளியங்குடியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழுக் கூட்டம் புளியங்குடியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் முஹம்மது யாகூப் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் அஹமது ஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் பஷீா்ஒலி, மாவட்ட பொருளாளா் முஹம்மது பிலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட்கான் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், புளியங்குடி காவல் சரகத்தில் மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்டத்துக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்; தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com