மாநில தடகளப் போட்டிக்கு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் தோ்வு

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு இலஞ்சி பாரத் மாண்டிசோரி
மாநில தடகளப் போட்டிக்கு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் தோ்வு

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் தோ்வாகியுள்ளாா்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முகம்மது சா்புதீன் முஸ்தபா மிக மூத்தோா் பிரிவில் 110 மீட்டா் தடைஓட்டத்தில் 2ஆம் இடமும், ஆதித்யா 80 மீட்டா் தடைஓட்டத்தில் 3ஆம் இடமும் வென்றனா்.

அவா்களில் முகம்மது சா்புதீன் முஸ்தபா, திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில தடகளப் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா். வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, நிா்வாக இயக்குநா் மோகன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com