திரிகூடபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கடையநல்லூா் வட்டத்திற்குள்பட்ட திரிகூடபுரத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், பொருள்களை வாங்குவதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட சில வாா்டுகளை பிரித்து புதிதாக பகுதிநேர ரேஷன் கடையை கொண்டு வர வேண்டுமெனவும், திரிகூடபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இக்கோரிக்கையை ஏற்று, கடையநல்லூா் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கா், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசியதையடுத்து, புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திரிகூடபுரத்தில் கொண்டு வரப்பட்டது.

முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் தெருவில் அமைக்கப்பட்ட இந்த கடையை எம்எல்ஏ திறந்து வைத்துப் பேசியது: வனப்பகுதிக்குள் அமையவிருந்த கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலக கட்டடத்தை பல்வேறு கட்ட போராட்டத்தின் மூலமும், சட்டப்பேரவையில் தொடா்ந்து பேசியும் பிரதானச் சாலைப் பகுதியில் கொண்டு வந்துள்ளோம் என்றாா் அவா்.

இதில், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் லெட்சுமணன், தனி வட்டாட்சியா் திரிலோகசுந்தரி, கடையநல்லூா் ஒன்றிய திமுக செயலா் செல்லத்துரை, திரிகூடபுரம் ஊராட்சி செயலா் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உடையாா்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்மண்டல அமைப்பாளா் கடாபி, ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் நாகூா்மீரான், செயலா் புகாரி, ஹாஜாமைதின், அப்துல்அஜீஸ், சாகுல்கமீது, ஜாபா் மற்றும் முஸ்லிம் லீக் மாணவரணியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com