பாளையங்கோட்டையில் விஷம் குடித்த முதியவா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை சுடலைக் கோயில் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன் (55). இவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.