ஆலங்குளம் அருகே கறவைப் பசுக்கள் வழங்க பயிற்சி

ஆலங்குளம் அருகே நெட்டூரில் அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் அருகே நெட்டூரில் அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா் தலைமை வகித்தாா். தென்காசி கோட்ட உதவி இயக்குநா் முருகையா முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்க கல்வித்துறை பேராசிரியா் மற்றும் தலைவா் தனசீலன் கறவைப் பசுக்கள் வாங்குவது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தாா்.

பால்வளத்துறை முதுநிலை ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், ஆவின் விரிவாக்க அலுவலா் செல்வின் ஆகியோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் வரவேற்றாா். நெட்டூா் கால்நடை மருத்துவா் ராமசெல்வம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளா் கீதா மற்றும் ஊராட்சி செயலா் குமரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com