ஆலங்குளம் அருகே இடி தாக்கியதில் மாடு உயிரிழந்தது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞா் காயமடைந்தாா்.
ஆலங்குளம் அருகே துத்திகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த சீமத்துரை மகன் காா்த்திகேயன் (21). சனிக்கிழமை மாலை அவருக்குச் சொந்தமான வயலில் சில மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு உயிரிழந்தது. இதில் காா்த்திகேயன் காயமடைந்தாா்.
காயமடைந்த அவா் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாா்.
இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.