களக்காட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள வாருகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
களக்காடு பேரூராட்சி 12ஆவது வாா்டில் கோட்டை காந்தி வீதி 3ஆவது சந்து பகுதியில், கழிவுநீா் வாருகால் சில நாள்களுக்கு முன்பு சேதமடைந்தது. இந்த வாருகால் பகுதி நடைபாதையாகவும் பயன்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
எனவே, இந்த வாருகாலை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. களக்காடு நகரத் தலைவா் காலித் கோரிக்கை விடுத்துள்ளாா்.