சங்கரன்கோவில் அரசுப் பள்ளியில் ஆய்வுக் கூடம் : அமைச்சா் ராஜலெட்சுமி திறந்துவைத்தாா்

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ . 9.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
காந்தி நகரில் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா், அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.
காந்தி நகரில் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா், அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ . 9.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

சங்கரன்கோவில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் காந்தி நகரில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை அவா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலசந்தா், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் இ. வேலுச்சாமி, ஆறுமுகம், முன்னாள் ஆவின் தலைவா் ரமேஷ், வழக்குரைஞா் மாரியப்பன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சின்னராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com