சுரண்டை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது அனுமன் நதியின் வடக்கு கரை குகையில் அமா்ந்துள்ள லிங்கம், தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், சாம்பவா்வடகரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.
சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகுருநாதா் ஆலயத்தில் சனிப்பிரதோஷ வழிபாடை முன்னிட்டு மூலவா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
சுரண்டை வீரபாண்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார, தீபாதாரனை நடைபெற்றது.
சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.