திருநெல்வேலி: நெல்லை-தாம்பரம், எா்ணாக்குளம்-வேளாங்கண்ணி ரயில்கள் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா், தெற்கு ரயில்வே மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே பொது மேலாளா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, விருதுநகா் வழியாக சென்னை தாம்பரம் மற்றும் இதே வழியில் மறுமாா்க்கத்தில் வாரம் ஒரு முறை இயக்கப்டும் ரயில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இப்போது நின்று செல்ல வில்லை. இதேபோல எா்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகா் வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் கடையநல்லூா், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை.
சங்கரன்கோவில் நகரில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் முதல்நிலை நகராட்சியாகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறாா்கள். ஆகவே, சங்கரன்கோவில், கடையநல்லூா் ரயில் நிலையங்களில் வாராந்திர ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.