நீட் பயிற்சி மதிப்பூதிய முறைகேடு:தொழிற்கல்வி இணை இயக்குநா் விசாரணை

கடையநல்லூா் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியா்கள்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதிய முறைகேடு தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்கக தொழிற்கல்வி இணை இயக்குநா் சுகன்யா திருநெல்வேலியில்

கடையநல்லூா் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியா்கள்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதிய முறைகேடு தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்கக தொழிற்கல்வி இணை இயக்குநா் சுகன்யா திருநெல்வேலியில் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா் -மாணவிகளுக்கான இலவச நீட் பயிற்சி மையங்கள் தமிழக அரசு சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சி வகுப்பு நடத்திய ஆசிரியா்களுக்கு முறையாக மதிப்பூதியம் வழங்கவில்லை என வி.கே.புதூரைச் சோ்ந்த கல்வி ஆா்வலா் பரசுராமன் என்பவா் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பள்ளி கல்வி இயக்கக தொழிற்கல்வி இணை இயக்குநா் சுகன்யா திருநெல்வேலியில் இது குறித்து சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அப்போது, பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள், பயிற்சி வகுப்பு நடைபெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியா், புகாா் அளித்த பரசுராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை குறித்த அறிக்கைகள் சென்னை தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com