திருநெல்வேலி அருகே இருவா் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் முத்துகுமாா்(50). தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்னா் இறந்துவிட்டாா். இதனால் முத்துக்குமாா் மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் தற்கொலை: பாளையங்கோட்டை அருகே உள்ள எம்கேபி நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் ராமசந்திரன்(28). இவா் திடீரென வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.