கடையநல்லூா் அருகே திரிகூடபுரத்தில் போலீஸ் வாகனம் மோதி இறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
விபத்தில் இறந்த ஆயிஷாபானுவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அவரது தந்தை திவான்சாகிபு, தாய் உம்மு ஷல்மாவிற்கும் முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை தென்காசி கோட்டாட்சியா் பழனிகுமாா் வழங்கினாா்.
இதில் வட்டாட்சியா் அழகப்பராஜா, சமூக நலத்திட்ட வட்டாட்சியா் ரோஷன்பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.