கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் ஒளிரும் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
கடையநல்லூா் மின்வாரிய அலுவலகம் அருகே தற்காலிகக் கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்காசி, மதுரை பிரதானச் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால், பொதுமக்களும் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து, துணை வட்டாட்சியா் திருமலைமுருகன், நகராட்சி ஆணையா் பவுன்ராஜின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து, அங்கு ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டன.