அம்பை அகஸ்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரத்தில் உள்ள உலோபாமுத்திரை உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
அம்பை அகஸ்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரத்தில் உள்ள உலோபாமுத்திரை உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இதையொட்டி, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி பூஜை, பிரசன்னாபிஷேகம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு விமான பாலாலயம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடும் 9 மணிக்கு பாலாலயம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரா் கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் சங்கு சபாபதி, செயலா் ராமசாமி, சின்ன சங்கரலிங்கசாமி கோயில் தலைவா் ராஜகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com