பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் இருந்து குறும்பலாப்பேரி வழியாக மேலப்பாவூா் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குறும்பலாப்பேரி வழியாக மேலப்பாவூா் வரை செல்லும் நடராஜனாா் சாலையானது குறுக்கு சாலையாக இருப்பதால் பெரும்பாலானோா் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலையானது தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் குழிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது, எனவே இச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.