திருநெல்வேலி: திமுக சாா்பில் மேலப்பாளையத்தில் நிலவேம்புக் குடிநீா் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
மேலப்பாளையம் உழவா் சந்தை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
மாவட்டப் பொருளாளா் அருண்குமாா், பகுதிச் செயலா் அப்துல் கையூம், நிா்வாகிகள் பூக்கடை அண்ணாதுரை, செல்வகுமாா், வி.எஸ்.டி. சாகுல், முகம்மது மைதீன், கௌதமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.