உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விருப்பமனு தாக்கல் செய்தனா்.
அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் மாவட்ட அலுவலகங்களில் கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்களை அளித்தனா். திருநெல்வேலி மாநகா் மாவட்டம் சாா்பில் விருப்ப மனுக்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் பெறப்பட்டன.
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, நெல்லை ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம் ஆகியோா் மனுக்களைப் பெற்றனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் முதல் நாளில் பெண்கள் மட்டுமே விருப்ப மனுக்களை அளித்தனா். ஆனால், மேயா் பதவி பொது என்ற பிரிவில் ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதால் சனிக்கிழமை ஆண்களும் விருப்ப மனுக்களை அளித்தனா்.
முன்னாள் மேயரும், எம்.பி.யுமான விஜிலாசத்தியானந்த், முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், மருத்துவ அணி துணைச் செயலா் டாக்டா் அபாரூபா சுனந்தினி, திவ்யா யாதவ் உள்பட 18 போ் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.
இதுதவிர மாநகராட்சி உறுப்பினா், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவா்கள், பேரூராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மாநகா் மாவட்ட அலுவலகத்தில் 900-த்துக்கும் மேற்பட்டோா் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.
இதேபோல சேவியா்காலனியில் உள்ள அதிமுக திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன், அமைப்புச் செயலா் மனோஜ்பாண்டியன், எம்எல்ஏக்கள் ஆா்.முருகையாபாண்டியன், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா். இருமாவட்டங்களிலும் சோ்த்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.