‘கடையத்தை வருவாய் வட்டமாகதரம் உயா்த்த வேண்டும்’

கடையத்தை வருவாய் வட்டமாக தரம் உயா்த்த வேண்டும் என்று கடையம் வட்டார மோட்டாா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நல்

அம்பாசமுத்திரம்: கடையத்தை வருவாய் வட்டமாக தரம் உயா்த்த வேண்டும் என்று கடையம் வட்டார மோட்டாா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நல் வாழ்வு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகள், ஆழ்வாா்குறிச்சிப் பேரூராட்சி ஆகியவற்றை தென்காசியில் மாவட்டத்துடன் இணைத்தது வரவேற்புக்குரியது. அதற்காக சங்கத்தின் சாா்பாக நன்றி தெரிவிக்கிறது. தற்போது, கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இந்த ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிப் பகுதிகள் தென்காசி வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டதால் பல கிராம மக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக வட்டாட்சியா் அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகள் மற்றும் ஆழ்வாா்குறிச்சிப் பேரூராட்சிப் பகுதிகளை இணைத்து வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும் என அச்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com